கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினர் கைது…!!
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாணவ அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி மாணவ அமைப்பினர் பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating