பெற்ற மகளையே கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகன் கைது…!!

Read Time:2 Minute, 16 Second

201609171312106039_man-arrested-for-molestation-on-own-daughter_secvpfமராட்டிய மாநிலத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தின் நலசோப்பாரா அருகேயுள்ள வாசாய் பகுதியை சேர்ந்தவர் மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுவயதிலேயே தாயார் இறந்துப்போனதால் தந்தையின் அரவணைப்பில் மீனா தனியாக வளர்ந்து வந்தார்.

பருவவயதை அடைந்த மீனாவின் இளமையும், அழகும் அவளது தந்தையின் மனதில் மிருகத்தனமான ஆசையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து மீனாவை மிரட்டி, அவளை கற்பழிப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்ட அந்தக் காமுகன், அவளது வயிற்றில் உருவான கருக்களை நாட்டு மருந்துகளை வாங்கித்தந்து மூன்றுமுறை அழித்துள்ளான்.

அதையும்மீறி, மீண்டும் கருத்தரித்த மீனா, தற்போது தனது 20-வது வயதில் காமக்கொடூரான தந்தைக்கு பிறந்த பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள். இந்த தகவலை அறிந்த உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த 47வயது நபரை கைதுசெய்த போலீசார், அவன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலை அருகே ஸ்குரூடிரைவரால் குத்தி விவசாயி படுகொலை…!!
Next post 70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! கண்கலங்க வைத்த சோகம்…!!