திருகோணமலையில் காட்டுத்தீ! பத்து ஏக்கர் காட்டுப்பகுதி நாசம்…!!
திருகோணமலை சர்தாபுர பகுதியின் ஊடாக கன்னியாவிற்கு செல்லும் வீதியில உள்ள காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ பரவியுள்ளது.
சர்தாபுர கடவான வனப்பகுதியில் இத்தீயானது மதியம் 12.30 மணியளவில் பரவ ஆரம்பித்த நிலையில் சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான காட்டுப் பகுதி தீயினால் கருகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணிகள் திருகோணமலை நகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது
தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் இந்த அனர்த்தத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருகோணமலை 5ம் கட்டை, சர்தாபுர, மற்றும் ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் வருடாவருடம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating