வத்தளை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து..!!
வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பில் காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை இதேவேளை தீ ஏனைய கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating