ஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழில் வரவேற்பு…!!
ஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘புகுவோகா’ விருதை வழங்குவதாக அறிவித்தது. இசைத் துறையில் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெறுவதற்காக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஜப்பான் சென்றார். அப்போது விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அவரை இளைஞர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட வரவேற்பு அட்டைகளை வைத்திருந்தார். அதில் ‘ரகுமான் அவர்களே வருக வருக’. ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
ஏ.ஆர்.ரகுமான் இந்த புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating