சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு…!!
6 நாடுகளில் 6 பாடல்களை வெளியிட்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறியுள்ளார்.
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் இடம் பெற்ற 6 பாடல்கள் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் 6 நாடுகளில் வெளியிட முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயணத்தை தொடங்கினார்கள். சென்னையில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிட்ட இந்த குழுவினர், தங்கள் படத்தின் இறுதி பாடலை வெளியிடுவதற்காக, கடந்த 11-ந்தேதி சிங்கப்பூரை சென்றடைந்தனர். முப்பது நாட்கள் பயணத்தில், கடினமான சூழ்நிலைகளை கடந்து, தற்போது சிங்கப்பூரை அடைந்துள்ள ஜிப்ரான் மற்றும் குழுவினருக்கு சிங்கப்பூர் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
“எங்கள் பயணத்தின் போது நாங்கள் பல தடங்கல்களை சந்திக்க நேரிட்டது…ஆனால் எங்கள் குழுவினர் மற்றும் ரசிகர்களின் பேராதரவால் இந்த பயணத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம்…” என்று ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறினார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating