ஏவுகணைகளை தாங்கிய யுத்த கப்பல் ஒன்றை அறிமுகம் செய்துள்ள இந்தியா..!!
Read Time:1 Minute, 17 Second
அதிக தொழில் நுட்ப;திறன் வாய்ந்த ஏவுகணைகளை தாங்கிய யுத்த கப்பல் ஒன்றை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனை நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
மர்மகோவா என பெயரிடப்பட்டுள்ள இந்த யுத்தக்கப்பல், விசாகப்பட்டினத்தில் எல்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, கடலில் இருந்து நிலத்திற்கு பாய்ந்து இலக்கை அழிக்கக் கூடிய உலகின் சிறப்பு யுத்தக்கப்பல்களில் ஒன்றாக இதுவும் திகழும் என குறிப்பிட்டார்.
இந்த யுத்தக்கப்பலில் மேலும் பல பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதன்பின்னர் 2020 அல்லது 2024 ம் ஆண்டுகளில் குறித்த யுத்தக்கப்பல் இந்திய கடற்படையிடம் கையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Average Rating