சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை..!!

Read Time:2 Minute, 39 Second

1474202648_853291_hirunews_ramkumar_2918497fசுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.உயிருக்கு போராடிய நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக பொலிஸ் தரப்பில்கூறப்படுகிறது.

கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐடி பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை நீண்ட நாட்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்தனர்.

நெல்லையில் உள்ள அவரது வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்தான் பொலிஸார் ராம்குமாரை கைது செய்தனர்.அவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது பொலிசார் கட்டாயப்படுத்தியதால்தான் ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டாரா என்ற சர்ச்சை இருந்தது.

இந்நிலையில் இன்று திடீரென்று ராம்குமார் மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று பொலிசார் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் போதே ராம்குமார் உயிரிழந்துவிட்டார் என்றும் உடல் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன.முக்கியமான கொலையில் பலத்த பாதுக்காப்போடு வைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் மரணம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம்..!!
Next post பாரா ஒலிம்பிக் : சைக்கிள் ஓட்டப்போட்டியின் போது விபத்து …ஈரான் நாட்டு வீரர் மரணம்!..!! (வீடியோ)