சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது..!!
Read Time:49 Second
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமானமுறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின்படி 18.09.2016 அன்று இரவு பொலிஸ் விசேட அதிரடிபிரிவினரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பலஉபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating