கிளிநொச்சி பாடசாலைகளில் குரங்குகள் அட்டகாசம்..!!
தமது பாடசாலை வளாகத்தினுள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்துவருவதாக கிளிநொச்சி மகாவித்தியாலய நிர்வாகம் கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும், வனவிலங்குத் திணைக்களததிற்கும் முறைப்பாடு செய்துள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் பெருந் தொகையான குரங்குகளின் வருகையைக் கட்டும்படுத்தும்படி கோரப்ப ட்டு ள்ளது.
பாடசாலை உபகரணங்களை எடுத்துச் சென்று மரங்களில் உட்கார்ந்து அவற்றுடன் விளையாடுவதாகவும் நிர்வாகம் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கிளிநொச்சியில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் தமது அன்னாசிப் பழங்களையும், மாம்பழங்களையும் மரக்கறி பயிர்ச் செய்கைகளையும் குரங்குகள் நாசம் செய்துவருவதைக் கட்டுப்படுத்தும்படி தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றார்கள்.
நகரப்பிரதேசங்களிலிருந்து இவற்றை காடுகளுக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறையும் இவர்களால் கோரப்பட்டுள்ளது.
Average Rating