15 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!
Read Time:58 Second
வலஸ்முல்ல போவல பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தின் காரணமாக 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தங்காலை பிரிவுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் மூன்றாம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி தற்போது தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating