பாதுகாப்பை கோரி மடக்கும்புற தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!!

Read Time:1 Minute, 30 Second

xzcxzcxதலவாக்கலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வட்டகொட – மடக்கும்புற தோட்ட நடுப் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தேயிலைமலையில் வேலை செய்யும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தோட்ட நிர்வாகத்தை வலியுறுத்தும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

காட்டெருமைகளின் வருகையால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முறையிட்டனர்.

இதனைதவிர காட்டு விலங்குகளான எருமை, சிறுத்தை பன்றி மற்றும் பாம்பு என்பவற்றோரு, குளவி கொட்டில் இருந்தும் அவர்கள் பாதுகாப்பை கோரி இருக்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காட்டு எருமையின் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் நுவரெலிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!
Next post அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி..!!