வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரியவர் கைது…!!
அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள வௌ்ள நிவாரணத்தை வழங்குவதற்காக 24 வயது குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட ரால்மடுவ பகுதி கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக கலாஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வௌ்ள பாதிப்பு குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய வீட்டுக்கு வந்திருந்த வேளையே தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டதாக குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி 41 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுளள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating