யமனாக மாறிய விளாம்பழம் : யானை தாக்கி பெண் பலி…!!
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் இன்று புதன்கிழமை காலை வேளையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலில் முத்துலிங்கம் ஜானகியம்மா (வயது 65) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண் காலை வேளை உணவுக்காக மீன் வாங்கிக் கொண்டு வரும் பாதையில் விளாமரம் ஒன்றுக்கு அருகில் விளாம்பழம் பொறுக்குவதற்காக சென்ற போது அம் மரத்திற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த யானை குறித்த பெண்ணைத் தாக்கியதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating