எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!!
எகிப்து நாட்டில் அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் சென்ற படகொன்று திடீரென்று நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனை எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் காலித் மெகஹெத் உறுதி செய்துள்ளார்.
மூழ்கிய படகிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்புக்குழுவினர் காப்பாற்றியதாகவும், வேறு யாராவது உயிர்பிழைத்திருக்கிறார்களா? என்று தேடி வருவதாகவும் எகிப்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதால் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating