திருப்பூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை இழுத்துச்சென்ற பெற்றோர்…!!
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 23). உறையூரைச் சேர்ந்தவர் திவ்யா (19). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வழக்கம் போல் அவர்கள் வேலைக்குச் சென்று விட்டனர். தனியாக குடும்பம் நடத்த வாடகைக்கு வீடு தேடி வந்தனர்.
திவ்யா திருமணம் பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை திடீரென பனியன் கம்பெனிக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த திவ்யாவை தாக்கி அவரை இழுத்துச் சென்றனர்.
இது பற்றி தெரியவந்ததும், அதிர்ச்சியடைந்த சுந்தரராஜ் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதில் தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் அடித்து இழுத்துச் சென்றதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கூறியிருந்தார். மேலும் திவ்யாவை இழுத்துச் செல்வது போன்ற வீடியோவில் பதிவான காட்சிகளையும் கொடுத்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating