பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை காணமுடியவில்லை தற்கொலை செய்துகொண்ட தந்தை…!!

Read Time:2 Minute, 14 Second

16-1455623693-old-age-55-600-jpg-300x225தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காணமுடியாது மன உளைச்சலுக்கு உள்ளான 71 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மஹவல ரதலவெவ பிரதேசத்தை சேர்ந்த இவர், தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தனது பிள்ளைகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் உங்களை பார்க்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் கோரியுள்ளார்.

இதனையடுத்து, ஹொரனை பகுதியில் வசித்து வந்த வந்த மகன் ஒருவர், தந்தையை காண சென்றுள்ளார். இதன் போது தனது பேரப்பிள்ளைகளை காண ஆசையாக இருப்பதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த ஆசை நிறைவேறாத காரணத்தினால் குறித்த நபர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 150 பேர் பத்திரமாக வெளியேற்றம்…!!
Next post வெளிவாரி பட்ட கற்கை நெறிகளுக்கான பதிவு இடை நிறுத்தம்…!!