மீண்டும் ஒரு தீ பரவல்…!!
ஹபரனை – உருளு பிரதேச பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உருளு வனப்பகுதி மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமருங்கிலும் இந்த தீ பரவிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக இரண்டு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டன எனவும் தீயிற்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating