இளம் பெண்ணை கடத்திய இளைஞரும் அதற்கு உதவிய தந்தையும் கைது…!!

Read Time:2 Minute, 23 Second

625-117-560-350-160-300-053-800-210-160-9015 வயதான பருவப் பெண்ணை பெற்றோரின் பொறுப்பில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் பெண் ஒருவர் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார்.

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த தனக்கும் இளைஞக்கும் இடையில் இருந்து வந்த காதல் தொடர்பு காரணமாக, இளைஞனின் அழைப்புக்கு அமைய தான் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக இளம் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

திருமணம் செய்யும் வயதை பூர்த்தியாக இளம் பெண்ணை கடத்திச் சென்றமை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனும் அதற்கு உதவி குற்றச்சாட்டில் இளைஞனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிபொரு கொடூரமான தாயை எங்கும் பார்த்திருக்க முடியாது? இவ தாயா அல்லது பேயா? வீடியோ
Next post பொலிஸ் நிலையங்கள், சிறைகளில் தொடரும் மர்ம மரணங்கள்…!!