ஆஸ்திரேலியாவில் 27 வயது இந்தியர் காரில் இருந்து தள்ளிக்கொலை
Read Time:1 Minute, 23 Second
இந்தியாவைச்சேர்ந்தவர் ராஜன்நீஷ் ஜோகா. 27 வயதான இவர் மெல்போர்னில் படிப்பதற்காக சமீபத்தில் ஆஸ்திரேலியா வந்தார். அவர் காரில் சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடிவந்த ஒருவன் ஜோகாவின் ஓடும்காரில் ஏறினான். பிறகு அவன் ஜோகாவை காரில் இருந்து தள்ளிவிட்டான். இதில் ஜோகா கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாகச்செத்தார்.
20 வயதான அவன் ஏற்கனவே ஒரு காரை திருடிய குற்றத்துக்காக போலீசார் அவனை துரத்திவந்தனர். திருட்டுக்காரில் பயணம்செய்த அவன் வேகமாக காரை ஓட்டிவந்தபோது காரின் டயர்கள் வெடித்தன. இதனால் அவன் அந்த காரில் இருந்து இறங்கி ஓடினான். அப்போதுதான் ஜோகாவின் கார் அந்த வழியாக வந்தது.
ஜோகாவின் ஓடும்காரில் ஏறினான். பிறகு அவன் ஜோகாவை காரில் இருந்து தள்ளிவிட்டான். இதில் ஜோகா கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாகச்செத்தார்.