கம்பஹா, வீரங்குல பொலிஸ் நிலையத்தில் பாரிய தீ அனர்த்தம்…!!
கம்பஹா மாவட்டத்திலுள்ள வீரங்குல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறைக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தீயணைப்புப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களும் தீ அணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் தீ அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை மதிப்படப்படவில்லை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating