மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கேர்ணலுக்கு விளக்கமறியல் நீடிப்பு…!!
மாலபே -பிட்டுகல பிரதேசத்தில் தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியஇராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பிரதானநீதவான் தம்மிக ஹேமபால இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த கேர்ணலின் மனைவிசுகம் அடைந்திருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டை நடத்துவதற்கு பயன்படுத்திய 9 மில்லி மீற்றர்துப்பாக்கியானது அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கையினைநீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating