யாழ் “எழுக தமிழ்” நேரலைத்தொகுப்பு…!! (வீடியோ காட்சிகள் & படங்கள்)

Read Time:2 Minute, 59 Second

unnamed-1யாழ் “எழுக தமிழ்” பேரணி தொடர்பான முழுமையான விபரங்கள்.

எழுக தமிழுக்கு பதிலாக இலங்கையரே எழுக என பேரணி நடத்தப்படவேண்டும்-அமைச்சர் மனோ-

எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி நடத்தப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்று எழுக தமிழ் பேரணி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிங்களவரே எழுக, தமிழரே எழுக மற்றும் முஸ்லிம்களே எழுக என்னும் தொனிப் பொருட்களில் பேரணிகள் நடத்தப்படுவதனை விடவும், இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய யுகமொன்று உருவாகியுள்ளது.

எழுக தமிழ் பேரணி நடத்தப்படுவதற்கு விசேட விதமான எதிர்ப்போ அல்லது ஆதரவோ நான் வழங்கப் போவதில்லை.

எழுக தமிழா அல்லது இலங்கையரே எழுக என்பதனை வரலாறு நிரூபிக்கும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்கி வர்த்தக நிலையங்கள் பூட்டு : திறக்குமாறுஇராணுவம் எச்சரிக்கை-

யாழ். நகரில் ஆரம்பமாகவுள்ள ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணிக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்கி யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பகுதிகளில் உள்ள கடைகளை திறக்குமாறு இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வர்த்தக சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், எழுக தமிழ் பேரணி ஆதரவு வழங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

timthumb-1

timthumb-2

timthumb

unnamed

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை: மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்…!!
Next post கூந்தல் உதிர்வதை தடுக்கும் கொய்யா…!!