ஏன்டா நீங்க லைக் வாங்க நானா கிடைச்சேன்? செல்ஃபி எடுத்தவரை பழிவாங்கிய பாம்பு…!! வீடியோ
இப்போதெல்லாம் செல்ஃபி எடுப்பது என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது. செல்ஃபி எடுக்காதவர்கள் எல்லாம் ஏதோ கற்காலத்தில் வாழ்பவர்கள் போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பலரும் எப்படியாவது ரிஸ்க் எடுத்து விதம் விதமான செல்ஃபிக்களை பேஸ்புக்கில் போட்டு லைக்கை அள்ளிவிட வேண்டும் என துடிக்கின்றார்கள். இம் முயற்சியினால் மரணங்கள் கூட சம்பவித்துள்ளன. ஆனாலும் எவரும் இந்த செல்ஃபியை விடுவதாக இல்லை.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வெளியான வீடியோ ஒன்றும் செல்ஃபியினால் ஏற்படும் விபரீதத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. அதாவது கும்பல் ஒன்று தம்மிடம் அகப்பட்ட மலைப் பாம்பினை வைத்துக்கொண்டு செல்ஃபிக்களை எடுத்து தள்ளியுள்ளனர். இதன்போது அவர்களின் தொல்லை தாங்க முடியாது பொறுமை இழந்த பாம்பு செல்ஃபி எடுத்த நபரை கொத்தி பதம் பாத்துள்ளது. இதனால் அவர் காயமடைய நேரிட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating