துப்பாக்கி விற்பனையுடன் தொடர்புடைய நபர்கள் கைது…!!
துப்பாக்கி விற்பனையுடன் தொடர்புடைய இரண்டு நபர்களை மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 12 ரக குழல் துப்பாக்கி மற்றும் 2 தோட்டக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்டியாகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் மிரிஹான பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்சை, சொய்சாபுர மற்றும் வத்தளை கல்வெட்டிய வீதி ஆகிய பகுதிகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சந்தேக நபரிடம் இருந்து 13.140 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர்களிடம் இருவரிடம் இருந்து 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating