பண்டாரவளை-பதுளை வீதியில் வாகன விபத்து – 9 பேர் காயம்…!!
பண்டாரவளை-பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து சென்ற வாகனத்தை செலுத்திய சாரதி நித்திரையில் ஆழ்ந்தமையால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 6 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர்களை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating