வீட்டில் தனிமையில் இருந்த மாணவி தற்கொலை…!!

Read Time:2 Minute, 19 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.

மாணவி, தாய் மற்றும் இளைய சகோதரனுடன் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

தாய், தனது மகனை பகுதி நேர வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.

மாணவியின் தாயும் தந்தையும் விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வந்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

அதேவேளை இலங்கையில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய இளம் பெண்கள் தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்துள்ளது.

காதல் தோல்வி, மன அழுத்தம், குடும்பம் மற்றும் சமூக பிரச்சினைகள் இந்த தற்கொலைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கிபிர் குண்டு மீட்பு…!!
Next post பருத்தித்துறையில் இருந்து சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து:18பேர் காயம்..!!