பருத்தித்துறையில் இருந்து சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து:18பேர் காயம்..!!
வவுனியா ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் 35 ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்று குடைசாய்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது எனவும் இதில் பயணித்தவர்களில் 6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் இந்த விபத்தின் போது காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் ஹொரவப்பத்தான மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சாரதி பேருந்தினை அதிவேகமாக செலுத்தியதாகவும், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பத்தான பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating