பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: சந்தேக நபர் கைது…!!
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குருநாகல் பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தொட்ட ஆண்கள் கல்லூரிக்கு முன்பாக வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த பாடசாலையில் சாரணப் பயிற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 190 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பில் இருந்து ஹெரோயினைக் கொண்டு வந்து கண்டி,கட்டுகஸ்தொட்ட பகுதிகளில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விநியோகித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் நாளைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating