மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…!!
ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் இன்று நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கினான்.
பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய இந்த வெடிகுண்டு தாக்குதலில் கடைவீதியில் இருந்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating