ஜப்பானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் ஆக பதிவு….!!
ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஜப்பானின் வடபகுதியில் உள்ள முக்கிய தீவான ஹொக்கைடோவிலும் பிற்பகல் 2.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானதாக தெரியவந்துள்ளது.
இந்த இரு நிலநடுக்கங்களால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை, இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating