சர்வதேச மாநாடு நாளை கொழும்பில்…!!
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இதில் 200ற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating