கடான பகுதியில் விபத்து ; பொலிஸ் அதிகாரிகள் இருவர் பலி…!!
இவ்விபத்து சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மஹேஸ் சந்தரதாச (28) மற்றும் விபுலு முனசிங்க தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடுவனா மற்றும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தை சரியான முறையில் தரித்து வைக்க தவறிய குற்றத்திற்காக கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating