இளையான்குடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

Read Time:1 Minute, 33 Second

201609271111081182_ilayangudi-near-worker-murder_secvpfசிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இரும்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சீதாராமன் (வயது53). ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சொக்கையா (30) என்பவருக்கும் ஆடு மேய்ப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று மாலையில் இருவரும் இரும்பூர் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சொக்கையா அரிவாளால் சீதாராமனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…!!
Next post கவர்ச்சி உடை அணிந்து வந்த கங்கனா ரணாவத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்…!!