நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…!!
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகராக ஒருபக்கம் நடித்து வந்தாலும் மறுபக்கம் தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் பழம்பெரும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் ரீமிக்ஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கம்…’ என்ற பாடலைத்தான் ஜி.வி.பிரகாஷ் ரீமிக்ஸ் செய்யவுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இரவினில் ஆட்டம்’ படத்தை நான் ரீமிக்ஸ் செய்யப்போகிறேன். இந்த பாடலை பற்றி நான் இப்போதைக்கு எதுவும் வெளியில் சொல்லமுடியாது. கண்டிப்பாக இந்த பாடல் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும் என்றார்.
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating