கடற்கரையை ரசித்துக்கொண்டிருந்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: சுனாமியை நினைவுபடுத்தும் கோரக் காட்சி…!! வீடியோ
கடவுள் கொடுத்த பல இயற்கைக் காட்சிகளில் கடற்கரைக்காட்சியும் ஒன்றாகும். இக்காட்சியை காண்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கடற்கரைகளில் ஏராளமானவர்கள் மாலை நேரங்களில் கூடுவது வழக்கமாகும்.
இதே போல சீனாவின் கடற்கரை பகுதி ஒன்றிலும் வழமை போல் கடற்கரை காட்சியை ரசிப்பதற்கு பலர் கூடியிருந்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத வகையில் கரையை நோக்கி வந்த இராட்சத அலை ஒன்று அவர்களை மூழ்கடித்துள்ளதுடன் இழுத்துச் செல்லவும் முயன்றுள்ளது.
எனினும் கடற்கரையில் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டிருந்ததனால் இந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பியுள்ளனர். குறித்த காட்சியானது 2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளை சூறையாடிய சுனாமியை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating