தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!!

Read Time:2 Minute, 6 Second

201609271528345125_soundarya-rajinikanth-joint-with-dhanush_secvpfசௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி பெண் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவிருக்கிறார்களாம். படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்பதுதான் இந்த படத்தின் தலைப்பாம்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை இரண்டையும் நடிகர் தனுஷ் எழுதவுள்ளாராம். தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதப்போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு தற்கொலை..!!
Next post கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடங்கள்…!!