கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: இலங்கையில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக்கொலை…!!

Read Time:1 Minute, 37 Second

201609271948037329_teenager-killed-in-sri-lanka-after-a-spat-over-wide-ball_secvpfஇலங்கை மத்துகம பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து வீசிய 15 வயது சிறுவன் வைடாக வீசியதால், இதுதொடர்பாக அவனுக்கும் பேட்டிங் செய்த 14 வயது சிறுவனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த பேட்டிங் செய்த சிறுவன் பந்து வீசிய சிறுவனை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவன் அருகில் இருந்த வெட்டாவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கம்பளையில் நபர் ஒருவர் மாயம்…!!
Next post வகுப்பிற்கு வராததைக் கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள்: டெல்லியில் பயங்கரம்…!!