விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மனிநேயமிக்க சாரதி…!!

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற வேளை வீதியால் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனமென்று விபத்தில் காயமடைந்த இளைஞனை ஏற்றி கொண்டு அருகிலிருந்த பழுகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கு அதிகாரிகள் காணப்படாமையினால் பிக்கப் சாரதி அவருடைய வாகனத்தில் காயமடைந்த இளைஞனை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையிலுள்ள இளைஞனின் நிலையை அறிந்து துரிதமாக செயற்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மனிதநேயம் மிக்க சாரதி மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களின் துரித முயற்சியின் பலனாக குறித்த இளைஞனின்உயிர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை…!!
Next post பிரதமர் நாளை நியூசிலாந்திற்கு விஜயம்…!!