கோடிட்ட இடங்களை நிரப்பிய பார்த்திபன்…!!

Read Time:2 Minute, 28 Second

201609281229184154_parthiepan-fill-up-the-blanks_secvpfபார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் தலைப்பில் மட்டுமில்லாது கதைக்களத்திலும் வித்தியாசமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படத்தற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து, பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கினார்.

சமீபத்தில் அவர் புதிதாக இயக்கும் படத்திற்கு படத்திற்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று தலைப்பு வைத்து ஒரு கோடு போட்டார். ஆனால், அப்படத்தில் யார் நடிகர், நடிகை என்பதை நிரப்பாமல் விட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது அந்த விடுபட்டு போன நடிகர், நடிகைகளை தெரிவித்து கோடிட்ட இடங்களை நிரப்பியுள்ளார் பார்த்திபன்.

அதன்படி, இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாகவும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பார்த்திபன் இயக்குவதோடு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார்.

படத்திற்கு சத்யா இசையமைக்கவிருக்கிறார். பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தை பார்த்திபன் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!
Next post பெண்கள் கூறும் ரகசியங்கள்: காது கொடுத்து கேளுங்கள்…!!