வாவ்..சூப்பர்: உலகத்துல இப்படியொரு பொண்டாட்டியா?… நீங்களும் இதைத் தான் கேட்பீங்க…!!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அப்படி ஒரு வரம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் பிறகென்ன வாழ்க்கையே சொர்க்கம் தான் போங்க.
காலையில் எழுந்து பல் துலக்கி கோலம் போட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காபி போட்டு அதனை கையில் எடுத்துக்கொண்டு, அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் கணவனின் அருகில் சென்று “என்னங்க” என்று எழுப்பும் குரலிலேயே, கணவனுக்கு அன்றைய நாள் அமோக நாளாக அமைய வேண்டும்.
அதுவும் கணவன் பணிக்கு செல்லும்போது, அவருக்கு தேவையான பொருட்களை அவரது பையில் எடுத்துவைத்துவிட்டு, குறிப்பாக அவர் சாப்பிடவிருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
அப்படி, கணவன்மார்கள் உணவினை மறந்துசென்றுவிட்டால், அதனை எப்படியாவது தனது கணவனிடம் கொடுத்துவிட வேண்டும் என தவிக்கும் மனைவியரின் தவிப்பே அழகுதான் போங்க.
ஆனால், கணவன் மறந்துவிட்டு சென்ற காலை உணவினை இப்படியும் ஒரு ஸ்டைலில் கொடுக்கலாம் என்று நமக்கு தோன்றியிருக்கிறதா?. கணவர் ஒருவர் காலை உணவான சாண்ட்விச்சை மறந்துவிட்டு சென்றுவிட்டார்.
9 வது மாடியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து புறப்பட்டு கீழே கார் பார்க்கிங் நிறுத்தும் இடத்திற்கு சென்று தனது காரினை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.
அப்போது, தனது வீட்டின் பால்கனியில் இருந்து தனது கணவனை கூப்பிட்ட மனைவி, அங்கு நின்றுகொண்டே, சாண்ட்விச்சை தூக்கிவீசியுள்ளார். இதில், சுவாரசியம் என்னவென்றால் மனைவி தூக்கி வீசிய சாண்ட்விச்சை, கணவன் சூப்பரா கேட்ச் பிடித்தார்.
பிறகென்ன, அலுவலகத்துக்கு சென்று மனைவி ஆசையாக தூக்கி வீசிய சாண்ட்விச்சை சாப்பிட்டு முடித்துவிட்டு தனது வேலையை தொடர்ந்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating