கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்…!!
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று ஏ9 வீதியில் வைத்து உழவு இயந்திரமொன்றை செலுத்தி வந்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை விளக்குவதற்கு பொலிஸார் இளைஞன் மீது நடத்தியுள்ளார்.
எனினும் குறித்த இளைஞன் தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க முற்பட்டதாகவும், மது போதையில் வீதியில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலில் இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த இளைஞன் தவறு செய்திருப்பினும் கூட முரட்டுத்தனமாக தாக்கியுள்ளமை பாரிய குற்றம் என அப்பகுதிமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating