பாதாள உலகக் குழுக்களுக்கிடையே மோதல்! ஒருவர் பலி – மூவர் காயம்…!!
வெலிபென்ன பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம், பாதாள உலக குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலென சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று வயதுடைய குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் டீ56 ரக துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தற்போது மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலபிட்டிய சுஜி என்ற பாதாள குழு உறுப்பினர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பலபிட்டியவை சேர்ந்த மற்றும் ஒரு பாதாள குழுவான சஞ்சீவ என்பரே இவர்களின் இலக்காக காணப்பட்டுள்ளார். எப்படியிருப்பினும் துப்பாக்கி சூட்டில் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பலபிட்டிய சஞ்சீவ என்ற பாதாள உலக குழு உறுப்பினர் வீட்டிற்குள் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலபிட்டிய சஞ்சீவ என்ற இந்த நபர் சில காலம் பலபிட்டிய பிரதேசத்தில் வாழ்ந்ததன் பின்னர் வெலிபன்ன பிரதேசத்திற்கு வந்த ஒருவராகும்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating