சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது: 18 பேர் பலி…!!
வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 2 பேரை காணவில்லை என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காணாமல் போன இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நிலக்கரி சுரங்கத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மேம்பாடுகள் காரணமாக நிலக்கரி உற்பத்தி அதிகம் நடைபெறும் சீனாவில் சமீப காலமாக விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ள நிலையில், தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating