பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு…!!

Read Time:1 Minute, 58 Second

imagesஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்டவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார்.

அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மாலை மாவனெல்ல ஹெம்மாதகம வீதியிலுள்ள யுகுலகல பிரதேசத்திலிருந்து இனம்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சடலம் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கடத்தப்பட்ட கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்…!!
Next post நீர் பற்றாக்குறை : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடல்…!!