42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்…!!
42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண் டார்.
மேலும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் த.குருகுலராஜா, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
முதன்மையாக இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.
அணிவகுப்பில் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2 ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
Average Rating