பஸ் ஒன்றுடன் மோதி தாயும், மகனும் பலி…!!
Read Time:1 Minute, 17 Second
கொழும்பு – குருணாகல் வீதியில் வதுராகல விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த இரண்டு பயணிகளும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரண்டு பயணிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்புக்கண பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய தாய் மற்றும் 28 வயது மகன் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating