2020ல் போக்குவரத்து மையமாக மாறவுள்ள கொழும்பு நகரம்…!!
Read Time:1 Minute, 15 Second
2020ம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை விசேட போக்குவரத்து மையமாக மாற்றமடையஉள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய போக்குவரத்து மையத்தை களனி பாலத்தினூடாக தெமட்டகொடை வரையிலும் மற்றும்ராஜகிரிய, பத்தரமுல்ல மற்றும் கடுவலை வரையில் அதிவேக பாதையும் புதிய புகையிரதபாதைகளும் அமைக்கவுள்ளதாகஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியின் மாளிகை, அலரி மாளிகை மற்றும் பல அரச நிறுவனங்கள்ஆகியன ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடமாற்றப்படும் என அமைச்சர் இதன் போதுதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating