குளிர்பானத்திற்கு அடிமையா நீங்கள்?… சர்க்கரை அளவினை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தற்போதெல்லாம் பெரியவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர், குழந்தைகள் என அனைவருக்கு இந்த சர்க்கரை நோய் வருகிறது. முக்கியமாக கர்ப்பிணிகள் இந்நோயால் படும் அவஸ்தை அதிகம் என்று தான் கூற வேண்டும்.
சரி இன்றைய இளைஞர்கள் மத்தியில் உலாவும் குளிர்பானத்தை அருந்துவது ஆரோக்கியமானதா?… வேண்டாம் நண்பர்களே!.. தாகமாக இருக்கிறது என்றால், தண்ணீர், பால், மோர், இளநீர் போன்றவற்றைப் பருகலாம். அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறு அருந்தலாம்.
சோடா, குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புமிக்க பானங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் இதைத் தவிர்த்துவிடுங்கள்.
நீங்கள் விரும்பி அருந்தும் குளிர்பானத்தில் சர்க்கரை அளவினைப் பாருங்க… எதற்காக அருந்த வேண்டும்?… வரும் முன் காப்பதே மிகவும் சிறந்தது நண்பர்களே!…
Average Rating