ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!
Read Time:1 Minute, 15 Second
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரத்னிலகல பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர்.
தலவாக்கலை ரத்னிலகல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்டபோதே 55 கிராம் கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating